எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வரலாற்றில் முதல்முறை: ரூ.1,100 கோடிக்கு ஏலம் போன பென்ஸ் கார்!

மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் வாகனங்களின் பங்கு அளப்பரியது. மரச்சக்கரங்களிலிருந்து தனிநபர் ஹெலிகாப்டர் வரை காலத்திற்கு ஏற்ப கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

News image
ஏலத்தில் விடப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர்
Updated On :20 மே 2022, 12:35 pm

DIN

மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் வாகனங்களின் பங்கு அளப்பரியது. மரச்சக்கரங்களிலிருந்து தனிநபர் ஹெலிகாப்டர் வரை காலத்திற்கு ஏற்ப கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிரத்யேகமாக ரூ.200 கோடி விலையில் மூன்று கார்களை தயாரித்து வருவதாக அறிவித்ததிலிருந்து வியப்பாகவும் என்னென்ன வசதிகள் அதில் இடம்பெறும் என்கிற ஆவலும் கார் பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 1955 ஆண்டில் தயாரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் வகைக் காரை கனடாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டதில் 143 மில்லியன் டாலருக்கு(ரூ.1,100 கோடி) பிரிட்டனைச் சேர்ந்த  ஒருவர் வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொகையால் உலக வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட கார் என்கிற சாதனையையும் இந்தக் கார் படைத்துள்ளது.

மேலும், 1955 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டு  மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் வகைக் கார்களில் இதுவும் ஒன்று என்பதும் உலகப் புகழ்பெற்ற கார்பந்தய வீரரான ஜுவன் மானுவல் ஃபாங்கியோ இந்தக் காரை பயன்படுத்தி உலக சாம்யியன் பட்டத்தை வென்றதும் கூடுதல் தகவல்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.