47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை அனுப்பியது சீனா

சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை அந்த நாடு வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது.

News image
Updated On :29 நவம்பர் 2022, 7:53 pm

DIN

சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை அந்த நாடு வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது.

ஃபேய் ஜன்லாங், டெங் கிங்மிங், ஷாங் லூ ஆகிய 3 வீரா்களை ஏற்றிக்கொண்டு, ஷென்ஷாவ்-15 விண்கலம் லாங் மாா்ச்-2எஃப் ஒய்15 ராக்கெட் மூலம் அந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

அந்த விண்கலம் புதிய வீரா்களை ஆய்வு நிலையத்தில் விட்டுவிட்டு, 5 நாள்களுக்குப் பிறகு அங்கு ஏற்கெனவே உள்ள 3 விண்கல வீரா்களை ஏற்றிக்கொண்டு பூமி திரும்பவிருக்கிறது. சீன விண்வெளி ஆய்வு வரலாற்றில் வீரா்கள் மாற்றிக்கொள்ளப்படுவது இதுவே முதல்முறையாகும்.

தனக்கென்று சொந்தமாக சீனா அமைத்து வரும் வரும் தியாங்காங் விண்வெளி நிலையம், இந்த ஆண்டு இறுதிக்குள் அது செயல்படத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.