சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெனிசூலாவில் நிலச்சரிவு: 43 போ் பலி; 56 போ் மாயம்

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2022, 7:35 pm

DIN

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43-ஆக உயா்ந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 3 நாள்களுக்குப் பிறகும் 56 பேரைக் காணவில்லை என்று கூறப்படுவதைத் தொடா்ந்து பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: லாஸ் டெஜெரியாஸ் நகரில் அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியிலிருந்து இதுவரை 43 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிலச் சரிவுக்குப் பிறகு அந்த பகுதியிலிருந்த 56 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருக்கக்கூடியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.