தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உக்ரைன் போரால் 40 லட்சம் குழந்தைகள் வறுமையில் அவதி: ஐ.நா

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரால் இதுவரை 40 லட்சம் குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2022, 6:49 am

DIN

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரால் இதுவரை 40 லட்சம் குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷியா போர் 6 மாதங்களைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரைன் தரப்பிலும் ரஷிய தரப்பிலும் சேதங்கள் இருந்தாலும் உக்ரைனின் பல பகுதிகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.

மேலும், தற்போது உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியப்படையினர் ஏவுகணைகள் மூலம் இரண்டாம் கட்ட தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷியப் படையெடுப்பால் போர் துவங்கியதிலிருந்து இதுவரை கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த அண்டை நாடுகளில் 40 லட்சம் குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.