தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அக்.28, 29-இல் ஐ.நா. குழு ஆலோசனை: மும்பை, தில்லியில் நடைபெறும்

ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்புக் குழுவின் இரண்டு நாள் கூட்டம், இந்தியாவில் அக்.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:31 pm

DIN

ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்புக் குழுவின் இரண்டு நாள் கூட்டம், இந்தியாவில் அக்.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பயங்கரவாத குழுக்களால் இணையவசதி, இணையவழி பணப் பரிமாற்றங்கள், ஆளில்லா விமான அமைப்புமுறைகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மும்பையில் முதல்நாள் கூட்டமும், தில்லியில் அடுத்த நாள் கூட்டமும் நடைபெறவிருக்கிறது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரும் ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்புக் குழுவின் தலைவருமான ருசிரா கம்போஜ் கூறுகையில், ‘சா்வதேச அமைதி, பாதுகாப்புக்கு மிகத் தீவிரமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது. ஐ.நா. குழு கூட்டத்தின்போது, பயங்கரவாதிகள் இணையத்தையும், இணையவழி பணப்பரிமாற்றங்களையும், ட்ரோன்களையும் பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்’ என்றாா். மும்பையில் நடைபெறும் தொடக்க நாள் கூட்டத்தில், பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் ஜேம்ஸ் கிளெவா்லி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்க உள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளா் சஞ்சய் வா்மா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.