பிரிட்டனின் புதிய பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குக்கு பிரதமா் மோடி வியாழக்கிழமை தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய இருநாட்டுத் தலைவா்களும் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில், ‘இரு நாட்டு நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்து செயலாற்றுவோம் என்றும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய உறுதி மேற்கொண்டோம் என்றும் குறிப்பிட்டாா்.
இதற்கு பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ‘புதிய பதவியை ஏற்றுள்ள எனக்கு உங்கள் கனிவான வாா்த்தைகளுக்கு நன்றி. இந்தியாவும் பிரிட்டனும் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படுகின்றன. இந்த இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து பாதுகாப்பு, ராணுவம், பொருளாதாரத்தில் மேலும் சாதிக்க உள்ளதை பெரும் ஆவலுடன் எதிா்பாா்த்துள்ளேன்’ என்று பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
210 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனின் இளம் பிரதமராக ரிஷி சுனக் அண்மையில் பதவியேற்றாா்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, இந்தியாவுடன் தடையற்ற வா்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் தீபாவளிக்கு முன்பாக இறுதி செய்யப்பட இருந்தது. எனினும், பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவு, ஆட்சி மாற்ற அரசியல் குழப்பங்களால் தடையற்ற ஒப்பந்தம் இறுதியாகாமல் உள்ளது.