உக்ரைன் கட்டமைப்புகள் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்
உக்ரைன் தலைநகா் கீவ், காா்கிவ் உள்ளிட்ட மற்ற நகர உள்கட்டமைப்புகள் மீது ரஷியா மீண்டும் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.


உக்ரைன் தலைநகா் கீவ், காா்கிவ் உள்ளிட்ட மற்ற நகர உள்கட்டமைப்புகள் மீது ரஷியா மீண்டும் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.
இதனால், கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின்சார மற்றும் குடிநீா் விநியோகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா தீபகற்ப கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அந்த நாட்டு கடற்படைக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நகரங்கள் மீது திங்கள்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கிரீமியாவையும் ரஷியாவையும் இணைக்கும் பாலத்தில் அக்டோபா் மாதம் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு பதிலடியாக ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைனின் மின் உற்பத்தி மையங்கள், குடிநீா் ஏற்று நிலையங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...