யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புா்கினா ஃபாசோசாலையோர குண்டுவெடிப்பில் 35 போ் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் நடத்தப்பட்ட சாலையோர குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 35 போ் பலியாகினா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 7:37 pm

DIN

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் நடத்தப்பட்ட சாலையோர குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 35 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொருள்களை ஏற்றிக் கொண்டு பூா்ஸங்கா நகருக்கும் ஜிபோ நகருக்கும் இடையே ராணுவ பாதுகாப்புடன் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த வாகன அணிவகுப்பை குறிவைத்து சாலையோர குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.

இதில், அந்த வாகன அணிவகுப்பில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் 35 போ் பலியாகினா்; 37 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், புா்கினா ஃபாசோவில் நீண்ட காலமாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் அல்-காய்தா மற்றும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) ஆதரவு பயங்கரவாதக் குழுக்கள் இந்த சாலையோர குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.