47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சீன அதிபர் ஷி ஜின்பிங்!

வீட்டுக்காவல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

News image
கோப்புப் படம்
Updated On :27 செப்டம்பர் 2022, 4:17 pm

DIN

வீட்டுக்காவல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஷி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வந்தது.

சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.

தற்போது, பெய்ஜிங் நகரில் உள்ள கண்காட்சியை அவர் பார்வையிட்ட காட்சிகளை, அந்நாட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதன் மூலம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுள்ளார் சீன அதிபர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.