புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபட்ச சகோதரா்களுடன் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு

 இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபட்ச ஆகியோரை பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:34 pm

DIN

 இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபட்ச ஆகியோரை பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசினாா்.

அண்மையில் இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபட்சவை சந்தித்த முதல் வெளிநாட்டு விருந்தினா் சுப்பிரமணியன் சுவாமி ஆவாா். இவா், ராஜபட்ச குடும்பத்தினருக்கு நெருங்கிய நண்பராக கருதப்படுகிறாா்.

கொழும்பில் உள்ள ஜெனரல் சா் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொருளாதார மீட்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடா்பான சா்வதேச கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றாா்.

முன்னதாக, மகிந்த ராஜபட்சவின் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற நவராத்திரி பூஜையில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டாா்; அப்போது, மகிந்த ராஜபட்சவை அவா் சந்தித்துப் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், கோத்தபய ராஜபட்சவை வியாழக்கிழமை காலையில் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வழக்குரைஞா்கள் உள்ளிட்ட குழுவினருடன் இலங்கை வந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, பிரதமா் தினேஷ் குணவா்தன, இலங்கைக்கான இந்திய தூதா், தமிழ் ஹிந்து மதத் தலைவா்கள் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியதாக குழு உறுப்பினா் ஒருவா் தெரிவித்தாா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த மக்கள், ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து, நாட்டைவிட்டு கடந்த ஜூலை 13-இல் தப்பிய கோத்தய ராஜபட்ச, முதலில் சிங்கப்பூருக்கும் பின்னா் தாய்லாந்துக்கும் சென்றாா். அத்துடன், தனது அதிபா் பதவியையும் ராஜிநாமா செய்தாா். இம்மாத தொடக்கத்தில் தாய்நாடு திரும்பிய அவா், கொழும்பில் பலத்த பாதுகாப்புடன் தங்கியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.