மாஸ்கோ: ரஷியாவின் தெற்கு குரில் தீவுகளுக்கு அருகே இன்று வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து ரஷிய அறிவியல் அகாடமி ஆஃப் சயின்ஸின் புவி இயற்பியல் ஆய்வின் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளதாவது:
ரஷியாவின் தெற்கு குரில் தீவுகளுக்கு அருகே சிமுஷிர் தீவின் தென்மேற்கே இருந்து வடக்கே 119 கிலோ மீட்டர் தொலைவில் (சுமார் 74 மைல்) 103 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 5:19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோ, பொருள் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.