பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க அதிபரிடம் பிரதமர் இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிரகரிக்கப்பட்ட நிலையில், விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி, நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்தார். பின்னர், நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், தேர்தலுக்கு தயாராகும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து பேசிய அவர், அரசை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதி தோல்வி அடைந்துள்ளதாக கூறினார்.