ஆப்கனில் கையெறி குண்டு தாக்குதல்: 6 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு  தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு  தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியமைத்ததிலிருந்து தீவிரவாதத் தாக்குதல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. எனினும் ஆங்காங்கே செயல்பட்டு வரும் அரசுக்கு எதிரான குழுக்கள் அவ்வப்போது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூலின் புல்-இ-கிஸ்தி மசூதியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதல் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த கையெறி குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com