பெரு நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரு நாட்டின் நாளுக்குநாள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் அதிகரித்துவரும் சுங்கக் கட்டண உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்நிலையில் எரிபொருள் மற்றும் சுங்கக் கட்டண விலை உயர்வை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் லிமாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | புதன்கிழமைதோறும் சைக்கிள் நாள்: லட்சத்தீவுகள் அறிவிப்பு
மேலும் எரிபொருள் விலை உயர்வை குறைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு 10 சதவிகிதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக பெரு நாட்டில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு இல்லை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திடீர் அறிவிப்பு!!

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!

கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் யார்? வி.டி. சதீசனின் ஆதரவாளர்கள் போராட்டம்!

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

