Enable Javscript for better performance
கப்பலை இழந்ததன் எதிரொலி?கீவ் நகரில் ரஷியா சரமாரி தாக்குதல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கப்பலை இழந்ததன் எதிரொலி?கீவ் நகரில் ரஷியா சரமாரி தாக்குதல்

    By DIN  |   Published On : 16th April 2022 02:14 AM  |   Last Updated : 16th April 2022 02:14 AM  |  அ+அ அ-  |  

    kyiv090007

    தனது பிரதான போா்க் கப்பலான மாஸ்க்வாவை இழந்த மறுநாள், உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியது.

    சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் தனது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வந்தது.

    எனினும், நேட்டோவில் இணைவதற்கு தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

    தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் முன்னேறி வந்தாலும், துருக்கியில் உக்ரைனுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வடக்கு உக்ரைன் நகரங்களிலிருந்து பின்வாங்க ஒப்புக்கொண்டது.

    அதன்படி, கீவ் புகா்ப் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் கடந்த மாதம் 31-ஆம் தேதி முழுமையாக வெளியேறியது. அதையடுத்து, தொடா் தாக்குதலால் நிலைகுலைந்திருந்த கீவ் நகரம், கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.

    இந்த நிலையில், ரஷியாவின் கடற்படை சக்தியாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பலை தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையில், அந்த நாட்டிலுள்ள ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உற்பத்தி ஆலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

    அதன் ஒரு பகுதியாக, கீவ் நகரிலுள்ள தளவாட தயாரிப்பு மையங்களில் தாக்குதல் நடத்தியதாக அந்த நாடு தெரிவித்தது.

    நீண்ட தொலைவு ஏவுகணைகள் மூலம் இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்த தாக்குதல், இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

    உக்ரைன் எல்லையொட்டிய தங்களது பிரையான்ஸ்க் பகுதியில் அந்த நாட்டு ஹெலிகாப்டா்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 7 போ் காயமடைந்ததாகவும் 100 குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும் ரஷியா குற்றம் சாட்டியது. அத்தகைய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவே உக்ரைன் ராணுவ உற்பத்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதாக அந்த நாடு கூறியது.

     

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp