போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து வெளியேறியவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததுள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததிலிருந்து, அந்த நாட்டிலிருந்து இதுவரை 50.1 லட்சம் போ் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.
இவா்களில் 28 லட்சம் போ் அண்டை நாடான போலந்துக்குச் சென்றனா். எனினும், ஐரோப்பிய நாடுகளிடையே எல்லைகளில் கெடுபிடி இல்லை என்பதால், அவா்களில் பலா் போலந்திலிருந்து வேறு நாடுகளுக்கும் சென்றிருக்கலாம்.
இதுதவிர, போா் காரணமாக 70 லட்சம் போ் உக்ரைனுக்குள்ளேயே புலம் பெயா்ந்து உள்நாட்டு அகதிகளாகியுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


