அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

“உக்ரைனில் அமைதி நிலவட்டும்”: கண்ணீர் விட்ட போப் பிரான்சிஸ்

ரஷியா உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் பிரான்சிஸ் அழுத சம்பவத்தின் காணொலி வெளியாகியுள்ளது. 

News image
போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்)
Updated On :10 டிசம்பர் 2022, 3:14 pm

DIN

ரஷியா உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் பிரான்சிஸ் அழுத சம்பவத்தின் காணொலி வெளியாகியுள்ளது. 

நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் அறிவிப்பு செய்தது. 200 தினங்களைக் கடந்து நடந்துவரும் இந்த போரில் இதுவரை இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷியாவுடன் போரிட்டு இதுவரை 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ரோமில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற போப் பிரான்சிஸ் இரு நாடுகளுக்குமிடையேயான போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி பேசினார். 

அப்போது உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என தெரிவித்த போப் பிரான்சிஸ் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதார். இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்த போப் பிரான்சிஸ் உக்ரைன் மக்கள் அமைதியுடன் வாழ இறைவனிடம் வேண்டுவதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.