உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

“உக்ரைனில் அமைதி நிலவட்டும்”: கண்ணீர் விட்ட போப் பிரான்சிஸ்

ரஷியா உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் பிரான்சிஸ் அழுத சம்பவத்தின் காணொலி வெளியாகியுள்ளது. 

போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்)

Published On :

ரஷியா உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் பிரான்சிஸ் அழுத சம்பவத்தின் காணொலி வெளியாகியுள்ளது. 

நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் அறிவிப்பு செய்தது. 200 தினங்களைக் கடந்து நடந்துவரும் இந்த போரில் இதுவரை இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷியாவுடன் போரிட்டு இதுவரை 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ரோமில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற போப் பிரான்சிஸ் இரு நாடுகளுக்குமிடையேயான போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி பேசினார். 

அப்போது உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என தெரிவித்த போப் பிரான்சிஸ் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதார். இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்த போப் பிரான்சிஸ் உக்ரைன் மக்கள் அமைதியுடன் வாழ இறைவனிடம் வேண்டுவதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.