இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
இருப்பினும் அவருக்கு லேசான அறிகுறியே உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறுவார் என்றும் அனைத்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் பின்பற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
முன்னதாக ராணி இரண்டாம் எலிசபெத்தை மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் கடந்த 10ஆம் தேதி வின்ட்சரில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து அடுத்த 2 நாள்களில் இளவரசருக்கு கரோனா தொற்று உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.