நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

'மனிதநேயத்தின் அடிப்படையில் படைகளைத் திரும்பப்பெற வேண்டும்' - புதினுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்

மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று புதினுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:07 am

மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று புதினுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்ற சூழல் நிலவுகிறது. 

ரஷியா - உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷியா, தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறிய அவர், இந்த மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.