பாகிஸ்தானில் இந்து வியாபாரி கொலை

பாகிஸ்தானில் இந்து வியாபாரி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் இந்து வியாபாரி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லஸ்பிலா நகரில் வசித்து வருபவர் ரமேஷ் லால் நந்த். இவர் கொடுத்த கடனை வசூலிப்பதற்காக ஹப்பிற்கு சென்றபோது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பலுசிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் லால் நந்த்  மீதான தாக்குதல் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும். 

சமீப காலமாக பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com