பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கனடா எல்லையில் பனியில் உறைந்து ஒரே குடும்பத்தில் நால்வர் பலி; இந்தியர்கள் என சந்தேகம்

அமெரிக்க - கனடா எல்லைப் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கைக்குழந்தை உள்பட நான்கு பேர் கடும் பனி காரணமாக உறைந்து பலியாகியுள்ளனர்.

News image

கனடா எல்லையில் பனியில் உறைந்து ஒரே குடும்பத்தில் நால்வர் பலி; இந்தியர்கள் என சந்தேகம்

Updated On :21 ஜனவரி 2022, 9:23 am

DIN


டோரன்டோ: அமெரிக்க - கனடா எல்லைப் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கைக்குழந்தை உள்பட நான்கு பேர் கடும் பனி காரணமாக உறைந்து பலியாகியுள்ளனர்.

கனடா எல்லைக்குள் உறைந்த நிலையில் பலியாகியிருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் மனிதர்களைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க எல்லைக்கு அதுகே, கனடா நாட்டின் எல்லைக்குள், இரண்டு பெரியவர்கள், ஒரு சிறார் மற்றும் ஒரு கைக்குழந்தையின் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கனடா நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றிருக்கலாம் என்றும், மோசமான வானிலை காரணமாக இவர்கள் பலியாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.