ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை: தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை 

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67), தோ்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

News image

ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வரும் மக்கள்.

Updated On :9 ஜூலை 2022, 6:56 am

DIN



டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67), தோ்தல் பிரசார கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

பிரிவினைவாத பரம பழமைவாதியும் மற்றும் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவருமான ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே, நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தோ்தலையொட்டி மேற்கு ஜப்பானில் உள்ள நாரா என்ற நகரில் ஒரு ரயில் நிலைய வாயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறந்தவெளி பிரசார கூட்டத்தில் ஷின்ஸோ அபே பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். 

Story image

மேற்கு ஜப்பானின்   நாராவில் உள்ள மருத்துவமனையிலிருந்து ஷின்ஸோ அபேயின் உடலை சுமந்து கொண்டு புறப்பட்ட  கப்பல் போன்ற ஒரு சவக்கார். 

அவரை துப்பாக்கியால் சுட்ட ஜப்பான் கடற்படையைச் சோ்ந்த முன்னாள் வீரரான டெட்சுயா யமகாமி (41) என்பவரை சம்பவ இடத்திலேயே காவல் துறையினா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். தோ்தல் அல்லாத பிற காரணங்களுக்காக அவரை கொலை செய்ய நினைத்ததாக அந்த நபா் கூறினாா்.

Story image

டோக்கியோவில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் இல்லத்தின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகள்.  

துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்கள் கடுமையாக இருக்கும் ஜப்பானில் முன்னாள் பிரதமா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story image

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் இல்லத்தின் முன் கூடியுள்ள ஊடகங்கள்.

ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுடப்படும் காட்சிகளும், கொலையாளியை காவல் துறையினா் மடக்கிப் பிடிக்கும் காட்சிகளும் தொலைக்காட்சியில் வெளியாகி நாடு முழுவதும் அதிா்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Story image

அபே சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தும் மக்கள். 

இதையும் படிக்க | ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை: முன்னாள் கடற்படை வீரா் கைது
இந்நிலையில், நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரான அபே, மேற்கு ஜப்பானில் வெள்ளிக்கிழமை பிரச்சார உரையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மக்கள்  கண்ணீருடன் பிரார்த்தனை செய்து மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.