25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

துபைக்கு செல்ல முயன்ற பசில் ராஜபட்ச: சுற்றிவளைத்த பயணிகள்; என்ன நடந்தது?

இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச துபைக்கு தப்பியோட முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபட்ச

Published On :1 பிப்ரவரி 2024, 3:16 pm IST

இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச துபைக்கு தப்பியோட முயற்சி செய்தார்.

இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தநிலையில்,  அதிபர் பதவியை நேற்று ராஜிநாமா செய்த கோத்தபய ராஜபட்ச, தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும், இலங்கையை விட்டு வெளியேறிய கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாகவும் இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் அபேவர்த்தன தெரிவித்தார். ஆனால், அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.

இது குறித்து நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று பேசுகையில், கோத்தபய ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இரத்னமாலா விமான தளத்திலிருந்து இரண்டு பெல்412 ஹெலிகாப்டர்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியறி அருகில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாகக் கூறினார்.

அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அவர் துபையில் தஞ்சமடைந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், கோத்தபய ராஜபட்சவின் சகோதரரும் இலங்கையின் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபட்ச இன்று அதிகாலை 12.30 மணி அளவில் கொழும்பு விமான நிலையத்திலிருந்து துபைக்கு தப்பிச் செல்ல இருந்ததார். பின் அங்கிருந்த பயணிகள் அவரை அடையாளம் கண்டு விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்ததால் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், இந்த சம்பவத்திற்குப் பின் பேசிய விமான சேவை கூட்டமைப்பின் தலைவர் கே.ஏ.எஸ். கனுகாலா  ‘ஐரோப்பா மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கான சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளோம்’ என அறிவித்துள்ளார். 

முன்னதாக. பொருளாதார நெருக்கடி அதிகரித்ததும் பசில் ராஜபட்சவின் வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.