இலங்கையில் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுக்க ராணுவம் மற்றும் காவல்துறைக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் அலுவலகம், அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சி மூலம் ரணில் விக்கிரமசிங்க பேசியதாவது:
“ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அரசின் சொத்துக்களை அழிப்பதை அனுமதிக்க முடியாது.
அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் மாளிகை திரும்ப வழங்கப்பட வேண்டும். நமது அரசியலமைப்பை கிழித்து எறியவிட முடியாது.
இதையும் படிக்க | மாலத்தீவிலிருந்து புறப்பட்டார் கோத்தபய: அடுத்து எங்கே?
ஃபாசிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். சில முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிகிறது.
ராணுவத் தளபதிகள் மற்றும் காவல்துறை தலைவருக்கு சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உளவுத் துறையின் தகவல்படி, போராட்டக்காரர்களால் பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றம் முற்றுக்கையிடப் போவதாக தகவல் வெளியானது. மேலும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது” என்றார்.
இதையும் படிக்க | இலங்கை இடைக்கால அதிபராக ரணிலை நியமித்தார் கோத்தபய
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இன்று ராஜிநாமா செய்வதாக தெரிவித்த நிலையில், அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கோத்தபயவுக்கு உதவிய ரணிலையும் உடனடியாக பதவி விலகக் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








