இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக நியமித்து கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இன்று தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்துள்ளதாக அந்நாட்டின் அவைத் தலைவர் மகிந்த யப்பா அபேவர்தனே இன்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார் கோத்தபய!
அதிபர் கோத்தபய ராஜபட்ச தப்பிச் சென்றதற்கு உதவியதாக கூறி பிரதமர் ரணிலை உடனடியாக பதவி விலகக் கோரி அவரின் அலுவலகத்தின் முன்பு இன்று காலை முதல் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கோத்தபய தப்பிச் செல்வதற்கு உதவ இந்தியா மறுப்பு?
இந்தச் சூழலில், அதிபர் கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யாமல் இடைக்கால அதிபரை நியமனம் செய்தது இலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

பிகார்: ஐஐடி பாட்னா வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

ஃபின் ஆலனைப் போன்று சில வீரர்களால் மட்டுமே விளையாட முடியும்: மார்க் பௌச்சர்

ஆளுநர் மாளிகையில் விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

