ரஷியாவுடனான போரில் இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 143 நாள்களைக் கடந்து நடந்து வருகிறது. போர் சூழல் காரணமாக இருநாட்டு அரசியலிலும் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதையும் படிக்க | அமெரிக்காவில் விமானத்தை சாலையில் தரையிறக்கிய போதை விமானி கைது
இந்நிலையில் போரில் இதுவரை 38,140 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனின் தாக்குதலில் ரஷிய ராணுவத்தின் 220 போர் விமானங்களும், 188 ஹெலிகாப்டர்களும், 1677 பீரங்கிகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.