விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஜூலை 4ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

News image

இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு (கோப்பிலிருந்து)

Updated On :25 ஜூலை 2022, 12:47 pm


கொழும்பு: இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஜூலை 4ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

அந்நாட்டு கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எரிபொருள்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் கழகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கையிருப்பை ஆராய்ந்து, மாணவர்களுக்காக பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுமார் ஒரு மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.