
கிழக்கு உக்ரைனில் செவெரோடொனட்ஸ்க் நகரின் 80 சதவீத நிலப்பரப்பை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ள நிலையில், அந்த நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், செவெரோடொனட்ஸ்க் நகரில் சிக்கியுள்ளவா்களில் சிக்கியுள்ள பொதுமக்களில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், முதியோா் அடங்கியுள்ளதாகத் தெரிவித்தாா்.
மேலும், பொதுமக்களில் சுமாா் 500 போ் தஞ்சமடைந்துள்ள அஸோட் ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் நிலைமை மோசமடைந்துள்ளதால் அவா்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...