ரஷியாவில் கோகோ கோலா, பெப்சி, மெக்டொனால்டு சேவைகள் நிறுத்தம்

ரஷியப் படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நான்கு பெரிய அமெரிக்க நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை தற்காலிகமா
ரஷியாவில் கோகோ கோலா, பெப்சி, மெக்டொனால்டு சேவைகள் நிறுத்தம்



ரஷியப் படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நான்கு பெரிய அமெரிக்க நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. 

இதுதொடர்பாக அமெரிக்க பன்னாட்டு துரித உணவு நிறுவனமான மெக்டொனால்டு வெளியிட்டுள்ள  ஒரு அறிக்கையில், ரஷியாவில் உள்ள தனது 850 விற்பனை நிலையங்களின் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் சேவைநிறுத்தத்தின் விளைவாக பாதிக்கப்படும் 62,000 ரஷிய தொழிலாளர்களின் சம்பளத்தை தொடர்ந்து அளிப்பதாகவும் மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோகோ கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைன் மீது ரஷியப் படைகள் நடத்தி வரும் தாக்குதலால் நடந்து வரும் சோகமான நிகழ்வுகளால் மக்களுடன் தங்களது இதயமும் இணைந்திருப்பதாக கூறியுள்ளது.

இதேபோன்று ரஷியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பெப்சி நிறுவனம், தங்களின் வணிகத்திற்கு மனிதாபிமானம் முக்கியமாக இருக்க வேண்டும் என தனது விற்பனையாளர்களுக்கு தெரிவித்துள்ளதுடன், உக்ரைனிய அகதிகளுக்கு தேவையான பொருள்களை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது. 

இதனிடையே, ரஷியாவிற்கான ஏற்றுமதியை நிறுத்துவதாக ரோலக்ஸ் வாட்ச் நிறுவனமும் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com