
கோப்புப்படம்
கொழும்பு: இலங்கையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, எரிபொருள், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வெள்ளிக்கிழமை கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை ரூபாயின் மதிப்பு வியாழன் அன்று அமெரிக்க டாலருக்கு ரூ.260 வீழ்ச்சியடைந்தள்ளது. ஏழு நாட்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.57 குறைந்துள்ளது.
கோதுமை மாவின் விலை 1 கிலோ ரூ.35 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (எல்ஐஓசி) டீசலின் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.75 ரூபாய், பெட்ரோலின் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.