ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தப்பட்டதா? - இந்தியத் தூதரகம் விளக்கம்

இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தப்பட்டதாக வந்த தகவல் தவறானது என்று இந்தியத் தூதரகம் விளக்கமளித்துள்ளது. 

News image
Updated On :13 மே 2022, 3:16 pm IST

இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தப்பட்டதாக வந்த தகவல் தவறானது என்று இந்தியத் தூதரகம் விளக்கமளித்துள்ளது. 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையையடுத்து பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். 

இலங்கையின் அசாதாரண சூழ்நிலைகளுக்கு இடையே, இந்தியா வருவதற்கு விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது. 

'இலங்கை மக்கள் இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசா நிறுத்தப்பட்டதாக வந்த செய்தியை இந்திய தூதரகம் மாறுகிறது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசா வழங்கும் பொறியில் பெரும்பாலான ஊழியர்கள்(இலங்கையைச் சேர்ந்தவர்கள்) வராததால் விசா வழங்கும் பணியில் நடைமுறை ரீதியான சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கை மக்களுக்கு தொடர்ந்து விசா வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. 

இந்தியாவுக்கான பயணத்தை இலங்கையர்கள் இலகுவாக மேற்கொள்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு உறுதிபூண்டுள்ளோம். இலங்கையில் இந்தியர்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப்போலவே இலங்கையர்களும் இந்தியாவில் வரவேற்கப்படுகிறார்கள்' என்று கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.