கொழும்பு: இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிகோணமலை சல்லி கடற்பகுதியில் 67 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடுமையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.