நேபாளத்தில் 22 பேருடன் புறப்பட்ட சிறிய விமானம் மாயம்: மோசமான வானிலை காரணமாக தேடும் பணியில் தொய்வு
நேபாளத்தில் வெளிநாட்டினா் உள்பட 22 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்ற சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேபாளத்தில் விமானம் மாயமானதைத் தொடா்ந்து, தலைநகா் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில் சோகத்துடன் காத்திருந்த பயணிகளின் உறவினா்கள்.









