விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: 205 யானைகள் பலியானதாக தகவல்

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருவதால் 205 பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2022, 5:03 pm IST

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருவதால் 205 பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கென்யாவில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 205 யானைகள் மற்றும் பல வனவிலங்குகள் உயிரிந்துள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருகிறது.

இப்பகுதியில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கினாலும், கென்யாவின் வானிலை ஆய்வுத் துறை, வரும் மாதங்களில் நாட்டின் பெரும்பகுதிக்கு சராசரிக்கும் குறைவான மழை பெய்யும் என்று கணித்துள்ளது. இதனால் கென்யாவின் வனவிலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் முடிந்துவிடவில்லை என்ற அச்சம் ஏற்படுகிறது.

உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக வனவிலங்குகள் இறந்துள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவின் மிக மோசமான வறட்சியின் காரணமாக கென்ய வனவிலங்கு பாதுகாப்பில் இருந்த யானைகள் மற்றும் வரிக்குதிரைகள் உள்பட நூற்றுக்கணக்கான விலங்குகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒன்பது மாதங்களில் 205 யானைகள், 512 காட்டெருமைகள், 381 பொதுவான வரிக்குதிரைகள், 51 எருமைகள், 49  வரிக்குதிரைகள் மற்றும் 12 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கென்யாவின் சில பகுதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் போதிய தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், மக்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா சுற்றுலாத்துறை தண்ணீர் இல்லாத பகுதிகளில் உள்ள வனவிலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.