இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சீனாவில் தொழிற்சாலையில் தீ விபத்து: 36 பேர் பலி

மத்திய சீனாவில் உள்ள தொழிற்சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலியாகினர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:54 am

DIN

மத்திய சீனாவில் உள்ள தொழிற்சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

ஹெனான் மாகாணத்தின் அன்யாங் நகரின் வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனத்தின் தொழிற்சாலையில் திங்கள்கிழமை மாலை 4:22 மணிக்கு (உள்ளூர் நேரம்) தீ விபத்து ஏற்பட்டது.

திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். சிறிய காயங்களுக்கு உள்ளான இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை சீராக இருப்பதாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்புடைய சந்தேகப்படும் நபர்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.