விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

காலநிலை மாற்ற மாநாட்டுக்கு கோகோ கோலா நிதியுதவி: வலுக்கும் கண்டனம்

காலநிலை மாற்ற மாநாடு நடத்துவது தொடர்பாக கோககோலா நிறுவனத்துடன் ஐநா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

News image
Updated On :5 அக்டோபர் 2022, 7:46 pm IST

காலநிலை மாற்ற மாநாடு நடத்துவது தொடர்பாக கோகோகோலா நிறுவனத்துடன் ஐநா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காலநிலை மாற்ற பாதிப்புகள் சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க மாற்று எரிசக்தி மூலங்களுக்கு மாற உலக நாடுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இவற்றுக்கு மத்தியில் காலநிலை மாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக எகிப்து நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காலநிலை மாற்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்நிலையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு கோகோகோலா நிறுவனத்துடன் ஐநா ஒப்பந்தம் மேற்கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஓராண்டிற்கு 120 பில்லியன் நெகிழி பாட்டில்களை உற்பத்தி செய்யும் கோககோலா நிறுவனம் உலகின் பிளாஸ்டிக் குப்பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. 

புதைபடிவ எரிபொருள் தொழிற்துறையுடன் பிணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் உலகின் முக்கியமான காலநிலை மாநாட்டிற்கு நிதியுதவி செய்ய அனுமதிக்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்மா பிரைஸ்டான்ட் விமர்சனம் தெரிவித்துள்ளார். 

காலநிலை மாற்றத்திற்கு எதிரான மாநாட்டில் கோகோகோலா நிறுவனத்தை அனுமதிப்பது அதன் உண்மையான இலக்கை நோக்கிய பயணத்தையே கேலிக்குள்ளாக்குவதாக உலகம் முழுவதும் விமர்சனம் எழுந்து வருகிறது. 

எனினும் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோகோகோலா, கடலில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும், 2030ஆம் ஆண்டிற்குள் தங்களது பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.