நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

‘போர் என்பது..’ சர்ச்சையாகும் எலான் மஸ்க் கருத்து

போர் குறித்து எலான் மஸ்க் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image

எலான் மஸ்க்

Updated On :31 அக்டோபர் 2022, 6:59 am

போர் குறித்து எலான் மஸ்க் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உலகின் நம்.1 பணக்காரராக இருப்பவர். ஸ்பேஸ் எக்ஸ் என்கிற மற்றொரு நிறுவனம் மூலம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் செயற்கைக் கோள்களையும் ஏவி வருகிறார்.

மேலும், அவர் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், ட்விட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்க்கிற்கும் நீண்ட நாட்களாக நீடித்து வரும் சட்டப் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று எலான் மஸ்க் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘போர் என்பது இறுதி உச்நீதிமன்றம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போது, இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் - ரஷியா போர் நடைபெற்று வரும் சுழலில் இவரின் கருத்து பலரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.