கரோனாவால் உலகளவில் இதுவரை 65.73 லட்சம் பேர் பலியானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவின் தாக்கம் குறைந்தாலும் பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், கரோனாவால் உலகளவில் இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 65,73,890 பேர் பலியானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது 63,07,07,045 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60,98,36,554 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,737 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.