பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி ஒன்றில் உரையாற்றுவதற்காக சிறப்பு விமானம் மூலம் இஸ்லாமாபாத்தில் இருந்து குஜ்ரன்வாலாவுக்கு இன்று காலை புறப்பட்டார்.
இதையும் படிக்க- கேரளத்தில் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
ஆனால் அவரது விமானம் புறப்பட்ட 5 நிமிடத்தில் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறங்கியது. மோசமான வானிலை காரணமாக இம்ரான் கான் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இம்ரான் கான் சாலை மார்க்கமாக குஜ்ரன்வாலா புறப்பட்டு சென்றார்.