பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டருக்கு ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
இதில், அரசர் மூன்றாம் சார்லஸைத் தொடர்ந்து இளவரசர்கள் வில்லியம் மற்றும் சார்லஸ் ஆகியோர் ஒருவருடன் ஒருவராக ஊர்வலத்தைப் பின் தொடர்ந்தனர்.
பிரிட்டனின் நீண்ட கால ராணியான எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் கடந்த வியாழக்கிழமை (செப்.8) இரவு காலமானார். அவரது மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ்(73) பிரிட்டனின் அடுத்த அரசரானார்.
ராணி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரால் அரண்மனையில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று ராணியின் உடல் ராணுவ மரியாதையுடன் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.
ரதத்தில் கொண்டுவரப்பட்ட ராணியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது கிரீடம் வைத்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் அரசர் சார்லஸ், இளவரசர் ஆன்னி, இளவரசர் ஆன்ட்ரிவ், இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று இளவசர் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் ராணியின் ஊர்வலத்தில் ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் வந்தனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இளவரசர்கள் வில்லியம் - ஹாரி ஆகியோர் இணைந்து வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.