கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

10 ஆண்டுகளில் 1733 சூழலியல் ஆர்வலர்கள் கொலை: கவலையளிக்கும் ஆய்வு முடிவுகள்

உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச உரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
10 ஆண்டுகளில் 1733 சூழலியல் ஆர்வலர்கள் கொலை: கவலையளிக்கும் ஆய்வு முடிவுகள்
Updated On :29 செப்டம்பர் 2022, 1:51 pm

DIN

உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச உரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலநிலை மாற்ற பாதிப்பு தற்போதைய காலத்தில் உலகின் முன்னணி பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிகரித்துவரும் காலநிலை மாற்றத்தைத் தடுக்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். 

இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருவதாக சமீபத்திய அறிக்கை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. குளோபல் விட்னஸ் எனப்படும் அமைப்பு பத்தாண்டுகளில் உலகளாவிய சுற்றுச்சூழல் போராட்டங்கள் எனும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. 

அதில் உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 1733 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக அமேசான் காடுகள் அமைந்துள்ள பிரேசிலில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது அதிகப்படியான தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் மட்டும் 85 சதவிகிதமான கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறிப்பாக பிரேசில், கொலம்பியா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மட்டும் தலா 300 கொலைகள் நடந்தேறியுள்ளன. மெக்சிகோ மற்றும் ஹாண்டுராஸில் தலா 100 பேரும், குவாதமாலாவில் 80 பேரும், இந்தியாவில் 79 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 

இத்தகைய கொலைக் குற்றங்கள் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள ஆய்வறிக்கையானது காலநிலை பாதிப்புகளைக் களைவதற்கான ஜனநாயக குரல்கள் தொடர்ந்து ஒடுக்குப்பட்டு வருவதை கவலையுடன் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.