வெலிங்டன் (நியூசிலாந்து): நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அது ரிக்டா் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது.
நியூசிலாந்தில் உள்ள கெர்மாடெக் தீவுகள் பகுதியில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 6.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆககப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிர்சேதங்கள் குறித்த தகவல் உடனடியாகக் கிடைக்கவில்லை.