ஈக்வடார் நாட்டின் எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளராக அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும் பத்திரிகையாளருமான பெர்னாண்டோ(வயது 59) இருந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை கிட்டோ நகரில் பெர்னாண்டோ பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் ஏறச் சென்றபோது அடையாளம் தெரியாத ஒருவர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பெர்னாண்டோவின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
பெர்னாண்டோவின் மறைவுக்கு அந்த நாட்டின் அதிபர் மற்றும் சக வேட்பாளர்கள் இரங்கலும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? செந்தில் பாலாஜி விளக்கம்!

தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?

ஜன நாயகன் எப்போது? தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்த மறுதணிக்கை குழு!

நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! - மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

