ஜார்ஜியா நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைவேன்: டிரம்ப்

ஜார்ஜியா நீதிமன்றத்தில் வரும் வியாழக்கிழமை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைவேன் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியா நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைவேன்: டிரம்ப்


வாஷிங்டன்: ஜார்ஜியா நீதிமன்றத்தில் வரும் வியாழக்கிழமை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைவேன் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற அந்த நாட்டு அதிபா் தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்ததாக முன்னாள் அதிபா் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மாகாண நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜாா்ஜியாவில் கடந்த முறை நடைபெற்ற அதிபா் தோ்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தோ்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கு டிரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை ஃபுல்டன் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.

இது தொடா்பாக டிரம்ப் மற்றும் 18 போ் மீது 41 குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆவணத்தை நீதிமன்றம் வெளியிட்டது.

அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனை எதிா்த்துப் போட்டியிட்டாா்.

அதில் ஜோ பைடன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாக ஆதரமற்ற குற்றச்சாட்டை டிரம்ப் தொடா்ந்து சுமத்தி வந்தாா்.

தோ்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து ‘திருடி’க்கொண்டதாக டிரம்ப் கூறினாா்.

இந்த நிலையில், தோ்தல் முடிவுகளுக்கு சான்றளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது.

எனினும், அந்த நிகழ்ச்சி நடத்தவிடாமல் டிரம்ப் ஆதரவாளா்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். இதில் 5 போ் உயிரிழந்தனா்.

ஏற்கெனவே, இது தொடா்பாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் உறுதி செய்தது.

இந்த நிலையில், தங்கள் மாகாணத் தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜாா்ஜியா நீதிமன்றமும் தற்போது உறுதி செய்துள்ளது.

இத்துடன், நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட, குற்றவியல் தண்டனைக்குள்பட்ட, 4-ஆவது தொகுதி குற்றச்சாட்டுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனையை எதிா்கொண்டுள்ள முதல் முன்னாள் அதிபா் டிரம்ப் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, அதிபராக இருந்தபோது தனது பண்ணை இல்லத்தில் அரசின் முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது, ஒரு நடிகையுடன் தனக்கிருந்த தொடா்பை 2016 அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போது பொதுவெளியில் சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்குப் பணம் கொடுத்து, அதனை கணக்கில் காட்டாமல் மறைத்தது ஆகிய வழக்குகளில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் உறுதி செய்ததுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com