நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கிரீஸில் தொடரும் காட்டுத் தீ: தீயை கட்டுப்படுத்தும் பணியில் 600 தீயணைப்பு வீரர்கள்!

கிரீஸ் நாட்டில் மூன்று இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் 600-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2023, 10:09 am

கிரீஸ் நாட்டில் மூன்று இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் 600-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சில நாள்களாக அதிக அளவில் பரவி காடுகளை அழித்து வருகிறது. கிரீஸ் நாட்டை தவிர்த்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொளுந்து விட்டு எரியும் இந்த காட்டுத் தீயிற்கு இதுவரை 20  பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீ விபத்துகளில் இதுவும் ஓன்று. 

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறை சார்பில் கூறியதாவது: 7 விமானங்கள் மற்றும் 5 ஹெலிகாப்டர்களுடன் 295 தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயினால் 77 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் அழிவை சந்தித்துள்ளது. மற்ற இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 260-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 75 இடங்களில் சிறிது சிறிதாக பல இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது என்றனர்.

மின்னல் காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.