இந்தோனேசியாவில் ஹிஜாப் சரியாக அணியாத மாணவிகளுக்கு ஆசிரியர் மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான கிழக்கு ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரில் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது.
இந்த பள்ளியில் படிக்கும் முஸ்லீம் மாணவிகள் 14 பேர் ஹிஜாப் சரியாக அணியாமல் சென்றதற்காக, அவர்கள் தலையில் உள்ள பாதி முடியை மொட்டை அடித்து ஆசிரியர் ஒருவர் அவமானப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மாணவிகளின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டதுடன், மொட்டை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மேலும், முந்தைய காலங்களில் இந்த பள்ளிகளில் படித்த மாணவிகள் ஹிஜாப் அணிய மறுத்ததால், பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தோனேசியா கல்வித்துறை உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

