ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

‘போரைத் தொடங்கியது அவர்கள்தான்’: புதின் உரை

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஷிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் விளாதிமீா் புதின்  இன்று உரையாற்றினார்.

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 11:12 am

DIN

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஷிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் விளாதிமீா் புதின்  இன்று உரையாற்றினார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் கடைசியாக ரஷிய நாடாளுமன்றத்தில் புதின் உரையாற்றிய நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று உரையாற்றினார்.

ரஷிய அதிபர் புதின் பேசியதாவது, “நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன், போரைத் தொடங்கியது அவர்கள்தான். போரை நிறுத்துவதற்காகவே நாங்கள் பலத்தை பயன்படுத்துகிறோம். அமைதியான முறையில் தீர்வு காண எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், எங்கள் முதுகுக்கு பின்னால் வேறு விதமான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

ரஷியாவுக்கு எதிராக உக்ரைனை பகடைக்காயாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்துகிறார்கள். உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகள்தான் முழுப் பொறுப்பாகும்.

உள்ளூர் மோதலை உலகளவில் வளர்க்க மேற்கத்திய நாடுகள் விரும்புகிறார்கள். அதற்கேற்ப நாங்கள் சரியான முறையில் பதிலளிப்போம்” எனத் தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவு பெறுகின்றது.

முன்னதாக, உக்ரைன் நாட்டிற்கு நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

ரஷியா - உக்ரைன் போர்

ரஷியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

மேலும், அந்தப் பிரதேசங்களின் கணிசமான பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையிலேயே, அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.