ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சீனப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: ஆஸ்திரேலியா அறிவிப்பு

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என ஆஸ்திரேலியா மற்றும் கனடா தெரிவித்துள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :1 ஜனவரி 2023, 12:44 pm

DIN

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என ஆஸ்திரேலியா மற்றும் கனடா தெரிவித்துள்ளன.

உலகின் பல நாடுகளும் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ள நிலையில் தற்போது அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும், கனடாவும் இணைந்துள்ளன.

சீனாவில் கரோனா பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனைக் கட்டாயம் என அறிவித்தது. கரோனாவின் சரியான தரவுகளை குறிப்பிடமால் சீனா மறைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. சீனாவின் இந்த செயலால் புதிய வகை கரோனா திரிபு பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. அதன் காரணத்தினாலேயே சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் கனடா சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்த அறிக்கையில் ஆஸ்திரேலியா நிர்வாகம் கூறியிருப்பதாவது: சீனா மற்றும் ஹாங் காங் ஆகிய நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகளுக்கு அவர்களது பயணத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை கட்டாயம். இந்த நடைமுறை வருகிற ஜனவரி 5 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று கனடாவும் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.