டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து!

நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :15 ஜனவரி 2023, 7:07 am


காத்மாண்ட்: நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்ட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்ரா சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 68 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் செல்லும்போது விழுந்து விபத்துக்குள்ளானது.  

இதில், விமானம் முழுவதும் தீப்பிடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. 

விமானத்தில் இருந்து 68 பயணிகள், நான்கு விமான ஊழியர்கள் என 72 பேரின் நிலைமை கவலைக்குரியதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.