நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு: 15 பேர் பலி, இறப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 மே 2023, 7:52 pm IST

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் மழை பெய்ததால் அந்தப் பகுதி வெள்ளத்தாலும், நிலச்சரிவினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் தலைவர் கூறியதாவது: எனது கிராமத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அருகிலுள்ள பகுதிகளில் வசித்து வந்த 30-க்கும் அதிகமானோரை காணவில்லை. இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பயமாக இருக்கிறது. கனமழையின் காரணத்தால் இரண்டு ஆறுகளின் கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று (மே 4) பெய்யத் தொடங்கிய இந்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பலரது வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து விட்டது என்றார்.

மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

கிழக்கு ஆப்பிரிக்காவில் வசிக்கும் மக்களுக்கு இது போன்ற கனமழை பெரும் துயரத்தையே கொண்டுவந்து சேர்க்கின்றன. உகாண்டா மற்றும் கென்யா போன்ற நாடுகளிலும் கனமழை பெய்து வருகிறது. 

முன்னதாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் ரவாண்டாவைச் சேர்ந்த 129 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.